+++ மற்றுமொரு கடல் கொந்தளிப்பு - அவசர அறிவிப்பு +++
Google Buzz Logo

தமிழக கடலோரப் பகுதிகளை முழுவதும் மீண்டும் ஒரு சுனாமி தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

CNN

NDTV


உற்றார் தோழர்கள் எவரேனும் தமிழக கடலோரப் பகுதிக்கு சென்றிருந்தால் உடனே கடலோரப் பகுதியிலிருந்து விலகியிருக்க சொல்லுங்கள். மீட்புப் பணிக்கு சென்றவர்கள் எச்சரிக்கையாய் இருங்கள்.

ஜி-மெயில் மின்னஞ்சல் அழைப்புகள்
Google Buzz Logo

உங்களில் எவருக்கேனும் இன்னும் ஜி-மெயில் மின்னஞ்சல் முகவரி இல்லையா? கீழுள்ள சுட்டிகளை உபயோகித்து புதிய முகவரி ஒன்றை உருவாக்கிக் கொள்ளுங்கள்

சுட்டி 1 (பயன்படுத்தப்பட்டுவிட்டது)
சுட்டி 2 (பயன்படுத்தப்பட்டுவிட்டது)
சுட்டி 3 (பயன்படுத்தப்பட்டுவிட்டது)
சுட்டி 4 (பயன்படுத்தப்பட்டுவிட்டது)
சுட்டி 5 (பயன்படுத்தப்பட்டுவிட்டது)

சுட்டிகள் அனைத்தும் பயன்படுத்தப்பட்டுவிட்டது. இன்னும் எவருக்கேனும் ஜி-மெயில் மின்னஞ்சல் முகவரி தேவையா? எனது மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கவும்.ஜி-மெயில் எனக்கு அழைக்க வாய்ப்பளிக்கும்போது உங்களுக்கு பதில் மின்னஞ்சலில் சுட்டியை அனுப்புகிறேன்.

மாறாக, நீங்கள் இந்த சுட்டியை(http://isnoop.net/gmailomatic.php) தொடர்ந்து கவனித்து வந்தீர்களேயானால் உங்களுக்கு ஜீ-மெயில் மின்னஞ்சல் உருவாக்குவதற்கான சுட்டி கிடைக்கலாம்.

நிலநடுக்கம் - கடல் கொந்தளிப்பு
Google Buzz Logo

மிகக் கொடூரமான இந்த இயற்கைச் சீரழிவின் பாதிப்பைப் பற்றி பேசுவது, வலைப்பதிப்பது, இவையெல்லாம் தாண்டி எவரேனும் பாதிக்கப்பட்ட இந்தியருக்கு உதவ விரும்பினால் பிரதமர் தேசிய நிவாரண நிதித் திட்டத்தில் பங்கேற்பீர்

இலங்கைத் தோழர்களுக்கு உதவ கவிதனின் வலைப்பதிவில் உள்ள விவரங்களைப் பார்க்கவும்

விடுமுறையில் செல்கிறீர்களா - 2
Google Buzz Logo

கிறிஸ்மஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டுக்காக விடுமுறையில் செல்லத் தீர்மானிக்கிறீர்களா? இந்நேரம் விடுமுறையில் செல்கிறீர்களா - 1ல் சொன்ன யோசனைகளின் படி மின்னஞ்சல் பதிலிகளை தயார் செய்துவிட்டிருப்பீங்க.

அலுவலகத்தில் எல்லாவற்றையும் முடித்து அழகாக அடுக்கிவிட்டு செல்லத் தயாராக இருப்பீங்க. எதுக்கும் ரொம்ப நாள் விடுமுறையில் போகாதீங்க இல்லைன்னா நீங்க திரும்பி வரும் போது உங்க மேஜையும் அறையும் இப்படி இருந்தா ஆச்சரியப்படுறதுக்கில்லை








என்ன... எல்லாத்தையும் தூக்கி குப்பையில போடாம ஒன்னொன்னா படிச்சிப் பாக்கனும்னாதான் கஷ்டம்!

இனிய கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

விடுமுறையில் செல்கிறீர்களா - 1
Google Buzz Logo

கிறிஸ்மஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டுக்காக விடுமுறையில் செல்லத் தீர்மானிக்கிறீர்களா?

உங்களுக்கு உதவ சில மின்னஞ்சல் பதிலிகள் இதோ:

1) ஒரு நேர்முகத்தேர்வுக்காக விடுமுறையில் செல்கிறேன். அந்த வேலை கிடைக்காவிட்டால் உங்களுக்கு பதிலளிக்கிறேன்.

2) நிஜம்மா நான் விடுமுறையில் இல்லை. உங்களுக்கு பதில் அளிக்க விருப்பமில்லை அவ்ளவுதான்.

3) நான் அலுவலகத்தில் இல்லாததால் இந்த பதிலியை பெறுகிறீர்கள். இல்லையென்றால் இது கூட அனுப்பியிருக்கமாட்டேன்.

4) என் மூளையை எடுத்துட்டாத்தான் மேலாளராக்குவேன்னு சொல்லிட்டாங்க. அதனால அறுவை சிகிச்சைக்கு விடுமுறையில போறேன்.

5) விடுமுறையிலிருந்து திரும்பி வரும்வரை உன்னை மாதிரி வேலையத்தவங்க அனுப்புற உபயோகமில்லாத மின்னஞ்சலையெல்லாம் அழிக்க முடியாது. வந்ததும் அழிச்சிடுறேன், என்ன?

6) உங்கள் மின்னஞ்சலுக்கு நன்றி. நீங்கள் அனுப்பிய முதல் 10 வார்த்தைகளுக்கு ரூ.50, அதற்கு மேல் ஒவ்வொரு வார்த்தைக்கும் ரூ.10 உங்கள் கிரடிட் கார்டிலிருந்து கழிக்கப்பட்டது.

7) நன்றி. உங்கள் மின்னஞ்சல் எண் 999. சுமாராக 5 வாரங்களுக்கு பிறகு உங்கள் மின்னஞ்சல் படிக்கப்பட (அல்லது அழிக்கப்பட) வாய்ப்புள்ளது.

8) உங்கள் மின்னஞ்சல் சரியாக வந்தடையவில்லை. உங்கள் கணினியை ஒருமுறை ரீ-பூட் செய்துவிட்டு மீண்டும் ஒருமுறை மின்னஞ்சல் அனுப்பவும். (விடுமுறை விட்டு வந்து பாத்தா திரும்பத் திரும்ப இதே மாதிரி சில மின்னஞ்சல்கள் உங்களுக்கு வந்திருக்கும்)

9) உங்கள் மின்னஞ்சல் கிடைத்தது. இந்த பதிலி கிடைத்ததா என்று பதில் மின்னஞ்சல் அனுப்பவும்.

10) நீங்க அனுப்பிய மின்னஞ்சல் பத்திதான் யோசிச்சிட்டிருக்கேன். எங்கேயும் போயிடாம கணினிக்கு பக்கத்துலயே இருங்க, கூடிய சீக்கிரம் பதில் அனுப்புறேன்.

11) புது வேலைக்கு சம்பளம் எவ்வளவுன்னு பேசிக்கிட்டிருக்கேன். கவலைப்படாம தகவல் எதுனா இருந்தா சொல்லுங்க.

12) நான் வேற சர்க்கஸ்ல சேந்துட்டனுங்க.

13) மருத்துவக் காரணங்களுக்காக விடுமுறையில் சென்றுள்ளேன். திரும்பி வரும்போது என்னை 'அர்ஜுன்' என்பதற்கு பதிலாக 'அவ்வை சண்முகி' என்றழைக்கவும்.

சிறுகதை
Google Buzz Logo

ப்ருந்தாவனத்தின் லட்சக்கணக்கான வருகையாளர்கள்(சரி. சரி. கொஞ்சமே கொஞ்சம் பேர்) கேட்டுக் கொண்டதால் சில காலம் முன் நான் முயற்சித்த சிறுகதையின் மறுபதிப்பு...


(வருகையாளர்கள் - வார்த்தைக்கு நன்றி: பிச்சைப்பாத்திரம் சுரேஷ் கண்ணன்)

பதிக்க ஒன்னுமில்லைன்னு பழசை தூசி தட்டிப் பதிச்சாலும் அலட்டலுக்கு ஒன்னும் கொறச்சலில்லை.

மாயமான்

சென்னையின் புறநகர் பகுதிகளுள் ஒன்றான இந்தப் பகுதிக்கு நான் எஸ்.ஐயாகப் பதவியேற்று ஒரு வாரம் ஆகிறது. இன்னும் மனைவி, குழந்தைகளை கூட்டி வரவில்லை.

சென்னைக்கு அருகாமையில் இருந்தாலும் நகரின் பாதிப்புகள் குறைவாகவே இருந்தது. பதவியேற்றவுடன் நான் கவனிக்க வேண்டிய முதல் விஷயமாக் இருந்தது ஊருக்குள் திருட்டுத் தொல்லை மலிந்துவிட்டது என்பதே.

முந்தய திருட்டுக்களில் துப்பு கிடைக்குமா என்று பார்க்க ஆரம்பித்தேன். பொதுவாக இத்தகைய "மாஸ் தெஃப்ட்" கேஸ்களில் பெரும்பாலும் ஒரு கும்பலே சம்பந்தப்பட்டிருக்கும். அனைத்து திருட்டுக்களுக்கும் ஒருவித ஒற்றுமை இருக்கும். ஆனால் எஃப்.ஐ.ஆர் ஃபைல்களைப் புரட்டியதில் ஒன்றும் தேறவில்லை.

மாலையில் ரெகுலர் டியூட்டி முடிந்ததும் "நைட் பீட்"க்கு செல்லும் கான்ஸ்டபிள்களுக்கு பின்னால் அவர்களுக்குத் தெரியாமல் பின்தொடர்ந்து செல்ல ஆரம்பித்தேன்.

"நைட் பீட்"க்கு செல்லும் கான்ஸ்டபிள்கள் சுமார் 3 மணியளவில் தூக்கம் வருவதைத் தவிர்க்க பஸ் ஸ்டான்ட் டீக்கடையில் டீ குடித்துவிட்டு சிறிது நேரம் இளைப்பாறிய பிறகு மீன்டும் 6 மணிவரை ரவுன்ட்ஸ் வந்துவிட்டு ஸ்டேஷனுக்கு வந்து ரெஜிஸ்டரில் கையெழுத்திட்டு "நைட் பீட்" முடிப்பர்.

முதல் இரண்டு நாட்கள் அவர்களைப் பின்தொடர்ந்ததில் ஏதும் கிடைக்கவில்லை.

மூன்றாம் நாள் இரவு,

கான்ஸ்டபிள்கள் "நைட் பீட்"க்கு கிளம்பியவுடன் அவர்களுக்குத் தெரியாமல் வழக்கம் போல அவர்களைத் தொடர்ந்தேன். நான்கைந்து தெருக்கள் சுற்றியபின் இன்று புதிதாக சேர்க்கப்பட்ட ரூட்டில் நடக்க ஆரம்பித்தார்கள். சற்றே இடைவெளி விட்டு நானும்.

திடீரென்று அவர்களைக் காணவில்லை. திரும்பி அவர்களைத் தேடி நடந்ததில் வழி தவறிவிட்டேன். சரி திரும்ப வந்த வழியிலேயே திரும்பிவிடலாம் என்று நினைத்துக்கொண்டே நடந்தபோது "உர்ர்ர்ர்ர்ர்ர்..." என்றபடி என் மீது பாய்ந்தது அது.

சுதாரித்துகொண்டு எழுந்து பார்த்தேன். என் இடுப்புயரத்திற்கு ஜெர்மன் ஷெப்பர்டையும் ராஜபாளையத்தையும் கலந்து உருவாக்கிய மாதிரி நின்றுகொண்டிருந்தது அந்த நாய். ஜெர்மன் ஷெப்பர்டா? ராஜபாளையமா? எங்கு தப்பு நடந்தது என்றெல்லாம் மனதுக்குள் பட்டிமன்றம் நடத்த நேரமில்லை. ஆபத்து என அட்ரினலின் மூளைக்குணர்த்த ஓட ஆரம்பித்தேன்.

நான்காம் வகுப்பு படித்த போது ஒரு தெரு நாய் என்னைக் கடிக்கும் வரை நான் நாய்க்கு பயப்படாமல் தான் இருந்தேன். அன்று யாரோ அதற்கு உணவிடாமல் வம்பு செய்திருக்கிறார்கள் என்று எனக்கெப்படி தெரியும்? காரணமே இல்லாமல் அது என்னை கடித்துக் குதறியதில் மாலைமலரில் "சம்பவம் நடந்தபோது" என ஆரம்பிக்கும் நாலாம்பக்கச் செய்தியானேன்

அன்று முதல் இப்போது மிடுக்கான எஸ்.ஐ ஆன பிறகும் கூட எனக்கு நாய் என்றால் அடிமனதில் ஒரு கலக்கம்தான்.

நான் ஓட ஆரம்பித்தவுடன் நாய் மேலும் உற்சாகமாகி என்னைத் துரத்த ஆரம்பித்தது. ஓடி ஓடி களைத்து போன நான் கடைசியாக அந்த அபார்ட்மென்ட் பின்புறமாக இருந்த தென்னை மரத்தில் ஏறி மொட்டை மாடியில் குதிதேன். அடடா, கிராமத்தில் சிறுவயதில் மரமேற கற்றுக்கொண்டது எவ்வளவு நல்லதாப் போச்சி என்று எண்ணியபடி நிம்மதிப் பெருமூச்சு விட்டேன் நான். சற்று நேரம் உறுமிய நாய் ஏமாற்றத்தில் தலையைத் தொங்கப் போட்டபடி திரும்பி ஓடியது.

கீழே இறங்கி வர படிகளைத் தேடினேன். படிகளுக்கு போகும் வழியின் கதவு தாழிடப்பட்டிருந்தது. மொட்டை மாடியை சுற்றிப்பார்த்ததில் மழைநீர் சேகரிப்புக் குழாய் தெரிந்தது. போலீஸான என்னை இப்படி திருடன் போல குழாய் மூலம் இறங்க வைத்த நாயை சபித்த படி மெதுவாக குழாயை பிடித்தபடி இறங்க ஆரம்பித்தேன்.

முதல் மாடியில் உள்ள அப்பார்ட்மென்ட் ஒன்றின் பின்புறம் வந்தபோது வென்டிலேட்டர் வழியாக சில பேச்சுக்குரல்கள் கேட்டது. சற்றே கவனித்ததில் நான்கைந்து பேர் பேசிக்கொள்வது காதில் விழுந்தது.

"இன்னிக்கு எம்.ஜி.ஆர் நகர்ல நாலஞ்சி மாயமான் பாத்து வச்சிருக்கேன்"

"நான் கடைவீதியில ஒரு மாயமான் பாத்து வச்சிருக்கேன்"

"சரி எல்லாரும் ஆளுக்கொரு ராமனை எடுத்துக்கினு போய் ஒவ்வொரு மாயமானா அடிச்சிகினு வாங்க"

ஒன்றும் புரியவில்லை என்றாலும் மனதுக்குள் ஏதோ தப்பு நடப்பதாகப் பொறி தட்டியது. எட்டிப்பார்த்ததில் ஒரு மேஜை நிறைய பேனாக்களாக தெரிந்தது. எல்லாரும் ஆளுக்கு ஒரு பேனாவை எடுத்துக்கொண்டு செல்ல ஆரம்பித்தனர்.

எல்லாரும் சென்றபின் ஒருவன் மட்டும் அங்கேயே உறங்கிப்போனான்.

அப்பார்ட்மென்ட் நம்பர், பெயர் எல்லாவற்றையும் மனதில் குறித்துக்கொண்டு ஸ்டேசனுக்கு திரும்பினேன்.

மறுநாள் காலை அந்த அப்பார்மென்ட்டுக்கு சில கான்ஸ்சபிள்களொடு சென்றபோது முன்தினம் இரவு அங்கேயே உறங்கியவன் இருந்தான். விசாரனைக்கு வந்திருப்பதாகச் சொல்லாமல் புதிதாக ஊருக்கு வந்திருப்பதாகவும் இந்த வீடு வாடகைக்கு கிடைக்கும் என்று ஒரு ப்ரோக்கர் சொன்னதாகவும் சொல்ல, வாடகைக்கு இந்த வீடு கிடைக்காது என்று கூறினான். மெதுவாக பேச்சு கொடுத்தேன். அவன் நூதனப்பொருள் இறக்குமதி செய்து இன்டர்நெட் மூலம் விற்பனை செய்துவருவதாகச் சொன்னான்.

ஒரு பேனாவை எடுத்துக்காட்டிய அவன், "இது ஒரு மேஜிக் பேனா சார், எதுமேல வேணா எழுதலாம், எழுத்து சாதாரணமா கண்ணுக்கு தெரியாது. எழுதினத பாக்கனும்னா ரூபா நோட்டுல கள்ள நோட்டான்னு கண்டுபிடிக்கரமில்லியா அந்த UV பேனா லைட்ட இதுமேல அடிச்சம்னா தெரியும்" என்றான்.

"மாய மானின்" அர்த்தம் எனக்கு மெதுவாக விளங்க ஆரம்பித்தது. அவனை பிடித்து "உரிய மரியாதை" கொடுத்து விசாரித்ததில் பகல் நேரத்தில் கினற்றுக்கு மருந்தடிக்க, குழாய் ரிப்பேர் செய்ய, ட்ரெய்னேஜ் சுத்தம் செய்ய என்று வீடுகளின் உள்ளே வந்து நோட்டமிட்டு வீட்டின் முன் சுவற்றில் இந்த மாயப் பேனா கொண்டு வீட்டின் அமைப்பு திருடிவிட்டு தப்பிக்க வசதியான வழிகள் எல்லாவற்றையும் எழுதிவிட்டு வந்து, இரவில் ஆளிலாத வீடுகளில் புகுந்து கொள்ளை அடிப்பதாக ஒப்புக்கொண்டான்.

நோட்டமிட்டவன் தானே கொள்ளையடிக்கப் போகிறான், இந்த பேனா கொண்டு எழுதவேண்டிய அவசியம் என்ன என்று விசாரித்ததில், திருடும் போது மாட்டிக்கொண்டால் உடனே மாட்டியவனை வேறு ஊருக்கு அனுப்பிவிடுவதாகவும் அது போல வேறு ஊரில் இருந்து புத்தாக இங்கு கொள்ளையடிக்க வருபவனுக்கு வசதியாக இருக்க அது போல எழுதிவைப்பதாக கூறினான்.

"ஆகா! ஒரு குரூப்பாத்தான்யா அலையறனுவ"ன்னு நடிகர் வடிவேலு பொல மனசுக்குள் நினைத்தபடி சம்பதப்பட்ட அத்தனை பேரையும் உள்ளே தள்ள ஏற்பாடு செய்துவிட்டு இன்ஸ்பெக்டராகும் ப்ரமோஷன் கனவோடு வீடு திரும்பினேன்.

சாம்பிளுக்கு எடுத்து வந்த UV லைட் பேனாவை முன் சுவற்றில் அடித்த போது. வீட்டின் மொத்த அமைப்பையும் விலாவரியாக எழுதியிருந்தது தெரிந்தது. "பி.கு: இது எஸ்.ஐயின் கவர்மென்ட் குவார்ட்டர்ஸ் எனவே இந்த அமைப்பில் இன்னும் பல ஆண்டுகள் ஆனாலும் எந்த மாற்றமும் இருக்காது" என்று வேறு எழுதியிருந்தது.

"அடப்பாவிகளா! அங்க கைவச்சி இங்க கைவச்சி அடிமடியிலயே கை வச்சிருப்பானுக போல இருக்கே!". முதல் வேலையாக இது போல எந்தெந்த வீடுகளில் எழுதியிருக்குன்னு கண்டுபிடிச்சி அழிக்க வழி பண்ணனும். நாளைக்கு வேற ஊர்ல இருந்து மனைவி, குழந்தைகள்ளாம் வர்றாங்க அதுக்குள்ள நம்ம வீட்ல மட்டுமாவது அழிக்கனும்னு நெனச்சிகிட்டேன்.

காதலும் கல்யாணமும்
Google Buzz Logo

ஒரு ஊர்ல ஒரு (நிஜமாவே ரொம்ப நல்ல) சாமியார் இருந்தார். ஒவ்வொரு நாளும் மாலை சில மணிநேரம் மக்களை சந்திக்கறது அவர் வழக்கம். ஒரு நாள் அவர் கிட்ட ஒரு இளைஞன் வந்தான். அவன் வெகுநேரம் ஏதும் பேசாம ஓரமா நின்னுகிட்டிருந்தான்.

எல்லோரும் போனப்றம் அவன் அந்த சாமியார் கிட்ட போய் "சாமி, உங்க கிட்ட இதக் கேக்கலாமான்னு தயக்கமா இருக்கு, இருந்தாலும் எனக்கு வேற யாரும் சிறப்பா விளக்க முடியுமான்னு தெரியல. காதல்னா என்ன?" அப்பிடின்னான்

அதுக்கு அந்த சாமியார் "தம்பி, ஆசிரமத்துக்கு எதிர்ல ஒரு பெரிய கரும்புத் தோட்டம் இருக்கு, அதுல இறங்கி நடந்துக்கிட்டே போ, இருக்கிறதுலயே பெரிய கரும்பாப் பாத்து வெட்டிகிட்டு வா, காதல்னா என்னன்னு அப்றம் சொல்றேன். ஞாபகம் வச்சிக்க, திரும்பிப் பாக்காம நடந்து போய் கரும்பு வெட்டி முடிச்சப்றம் திரும்பி வா"ன்னாரு

கொஞ்ச நேரம் ஆச்சு. போனவன் வெறுங்கையோட திரும்பி வந்தான். சாமியார் "என்னப்பா? பெரிய கரும்பு எதுவும் சிக்கலையா ?"ன்னு கேட்டார்.

"வழியில சில பெரிய கரும்புங்களைப் பாத்தேன் சாமி ஆனா அதவிட பெரிசு இன்னும் கொஞ்சம் தூரத்துல இருக்குமோன்னு சந்தேகத்துல தோட்டத்தோட கடைசி வரைக்கும் போனேன், கடைசியில பெரிய கரும்பு ஏதும் இல்ல" அப்டின்னான்

"காதலும் அப்படித்தான், அதுவா நம்ம வழியில வரும்போது நமக்கு அது பெருசா தெரியாது, ஆனா காலம் கடந்து போனப்புறம் நாம தேடுனா கெடைக்காது"ன்னாரு சாமியார்.

"சாமி. இன்னோரு சந்தேகம், கல்யாணம்னா என்ன" அப்டின்னான்

அதுக்கு அவரு "ஆசிரமத்துக்கு பின்னால தேக்கு மரத்தோப்பு இருக்கு, போயி இருக்கறதுலயே பெரிய தேக்கு மரத்தை வெட்டி வண்டியில போட்டு எடுத்து வா, முன்ன மாதிரியே திரும்பிப் பாக்காம போய் வரனும். அப்றம் சொல்றேன் கல்யாணம்னா என்னன்னு" அப்டின்னாரு

கொஞ்ச நேரம் போனப்றம் அவன் ஒரு வண்டியில ஒரு தேக்கு மரத்தை போட்டு எடுத்து வந்தான். பார்த்தா அப்படி ஒன்னும் பெரிய மரமாத் தெரியலை.

சாமியார் "என்னப்பா இதுதான் நீ பாத்ததுலயே பெரிய மரமா?"ன்னாரு

அவன் "இல்லைங்க சாமி, போன தடவை மாதிரி இந்த தடவையும் ஏதும் கெடைக்காம போயிறக் கூடாதுன்னு முதல்ல பாத்த மரங்கள்ல பெரிசா இருந்ததை வெட்டிகிட்டு வந்தேன், அப்றம் கொஞ்ச தூரம் உள்ளே போய் பாத்தா இத விட பெரிய மரமெல்லாம் இருந்தது" அப்டின்னான்.

"இப்படி நம்முடைய எதிர்பார்ப்பையெல்லாம் மூட்டைகட்டி வச்சிட்டு எதோ ஒன்னு கெடைச்சாப் போதும்னு பண்ணிக்றதுதான் கல்யாணம். சில சமயம் நீ வெட்டினதே பெரிய மரமா இருக்கலாம், ஆனா பல சமயம் பெரிய மரம் வேற எங்கயாவது இருக்கும்"ன்னாரு

பூங்கொத்தும் மலர் வளையமும்
Google Buzz Logo

ஒரு வியாபாரி தனது புதிய நிறுவனத்தை ஆரம்பிக்க இருந்தார். அவருக்கு அவரது நண்பர் ஒரு பூங்கொத்தை அனுப்பச் சொல்லி பூங்கொத்து விற்பனையாளரிடம் சொல்லியிருந்தார்.

நிறுவனத் துவக்க தினத்தன்று பூங்கொத்துக்கு பதிலாக 'உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்' என்ற வாசகத்துடன் மலர்வளையம் வந்தது. வியாபாரி மிகுந்த கோபத்தோடு பூங்கொத்து விற்பனையாளருக்கு தொலைபேசி செய்து திட்டினார்.

அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்ட பூங்கொத்து விற்பனையாளர். "நீங்களாவது பரவாயில்லை. இன்னிக்கு உங்களுக்கு அனுப்ப வேண்டிய பூங்கொத்தை ஒரு சவ ஊர்வலத்துக்கு அனுப்பி வச்சிட்டான் எங்க கடைப் பையன். அதுல 'உங்களின் இந்தப் புதிய துவக்கம் வெற்றிபெற வாழ்த்துகிறேன்'ன்னு எழுதியிருந்துச்சி. அங்க இருந்து எப்ப திட்டுவரும்னு பயமாயிருக்கு" அப்படின்னார்

சாக்பீஸில் கலைவண்ணம் கண்டான்
Google Buzz Logo

விகடன் வார இதழில் ஒரு வளரும் சிற்பி சாக்பீஸில் தாஜ்மகால் செதுக்கியிருந்தார். நமக்குத்தான் யாராவது எதையாவது புதுசா செஞ்சா உடனே காப்பி அடிச்சி பாக்கத் தோனுமே.

என்ன ஒன்னு. நாம காப்பி அடிச்சி முடிச்சி பாத்தாக்க நம்ம அளவுக்கு ஒரிஜினல் கூட வராது (ஹி.ஹி. சும்மா டமாசு)

அவருக்கு ஒரு தாஜ்மகால்னா நமக்கு ஒரு கோவில் அப்பிடின்னு ஆரம்பிச்சி செதுக்கினா....











சாக்பீஸிலேயே உருவங்கள் சரியாக வரவில்லையே எனக்கு, கல்லில் உளி கொண்டு செதுக்கும் சிற்பிகள் எவ்வளவு கஷ்டப்பட்டு சிற்பங்களைப் படைப்பார்களோ!


படத்தின் மேல் சொடுக்கினால் பெரிதாகப் பார்க்கலாம்