அறிவியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அறிவியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்
Google Buzz Logo

சரியாத்தான் பாடி வச்சிருக்காங்க.. எப்படின்னு கேக்கறீங்களா? கீழ இருக்க படத்துல இருக்குற + ஐ கொஞ்ச நேரம் உத்துப் பாருங்க, அதை சுத்தித் தெரியற வெளிர்சிகப்பு வட்டங்கள் மறைஞ்சி சுத்திக்கிட்டிருக்கிற பச்சை வட்டம் ஒன்னு தெரியும்..




ஏன்னு யாராவது அறிவியல் பூர்வமா விளக்க முடியுமா?

(பாண்டிய மாமன்னருக்கு ஒரு மாபெரும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது, அதை தீர்த்து வைக்கும் சரியான பாட்டெழுதும் புலவருக்கு... ஹி. ஹி. ப்ருந்தாவனத்தில் ஒரு பின்னூட்டம் பரிசாய் அளிக்கப்படும் :-P )

உடல் என்னும் அற்புதம்
Google Buzz Logo

நமது உடலின் பல்வேறு பாகங்கள் மற்றும் சில நுட்பமான விஷயங்கள் பற்றி பள்ளிப் பருவத்திலே உயிரியல் பாடப் புத்தகங்களில் படித்திருக்கிறேன். ஆனால் நண்பரொருவர் அனுப்பிய மின்னஞ்சலில் இருந்த படங்களைப் பார்த்ததும் ஆச்சர்யத்தில் திகைத்துப் போனேன்.

தினமலர் வாரமலரில் வரும் "இது என்ன" பகுதி போல உங்களை கேள்வி கேட்டு (பின்னூட்டங்களை எதிர்பார்த்து) காத்திருக்க வைக்காமல், படங்களும் விளக்கமும் ஒன்றாக கீழே ....


இளஞ்சிவப்பு நிறமா அழகாய் இருப்பது வேறொன்றுமில்லை இரத்த சிகப்பணுக்கள்:



தமணியில் செறிவான பிராணவாயுவை கொண்டு செல்லும் அவை சிரையில் திரும்பும் போது அசுத்தங்களை உள்ளடக்கி கீழ்கண்டவாறு மாறிவிடும்


சிறு பாகற்காய் போல இருக்கும் இது மூளைக்கும் உடல் பாகங்களுக்கும் தகவல்களையும் கட்டளைகளையும் பறிமாற்றும் ஒரு நரம்பணு


அழுக்கான நுரை போலக் காணும் இந்தப் படத்திலுள்ளது ஒரு ஆரோக்கியமான பல். கீழே பசுமை நிறத்தில் இருப்பது பல் எனாமல் உருவாக்கும் பகுதி


மடித்து வைத்த ரொட்டித்துண்டு போல காட்சியளிப்பது சிறுகுடலின் ஒரு பகுதி. இங்கேதான் செரித்த உணவின் சத்துப்பொருள்கள் உறிஞ்சப்படும்


முட்க்காடு போல இருக்கும் இது நாக்கின் சுவையுணரும் நரம்புகளின் தொகுதி


இரைப்பையின் உட்பகுதியில் இந்தப்பகுதியில் தான் அமிலத் திரவங்களினால் இரைப்பை பாதிக்கப்படாமலிருக்க சளி போன்ற வழவழப்பான திரவம் சுரக்கிறது


அடுக்கி வைத்த அழகான சீட்டுக்கட்டு போல இருக்கும் இந்தச் சிதறல்கள் உருவாக்கும் சிறுநீரக கற்கள் மிக ஆபத்தானவை


தீக்குச்சி போன்ற இந்தப் பகுதி, மூளை மற்றும் தண்டுவடப் பகுதியை அதிர்ச்சியிலிருந்து காக்கும் நுன்மப் பொருளை உருவாக்குகின்றன


அழகாய் ரோஜாப் பூவின் இதழ்களைத் தூவி வைத்த படுக்கை போலிருக்கும் இது பெருங்குடலின் உட்பகுதி


இப்ப சொல்லுங்க உண்மையில் உடல் ஒரு அற்புதம் தானே!
(அப்பாடா ஒரு வழியா டைட்டில் வந்தாச்சி! )

வலைப்பூ - சோதிடம் + வானவியல் + ஒரு கேள்வி
Google Buzz Logo

வானவியலில் உள்ள அத்தனை கிரகங்களும் சோதிடத்திலும் பயன்படுத்தப்படுகின்றன. ஆச்சர்யப்படவைக்கும் உண்மை என்னவென்றால், அவற்றின் சுற்றுக் காலங்களும் சோதிடத்தில் சரியாக பயன்படுத்துவதே

உதாரணத்துக்கு,

பன்னிரு ராசிகளையும் வியாழன் (குரு) ஒருமுறை கடக்க எடுத்துக் கொள்ளும் காலம் சோதிடத்தில் பன்னிரு வருடங்கள் வானவியல் கண்டுபிடித்தது 11 வருடமும் 314.96 நாட்களும்.

சூரியன் பன்னிரு ராசிகளையும் கடக்க எடுத்துக் கொள்ளும் கால அளவு 1 வருடம். சூரியனை ஒருமுறை சுற்றி முடிக்க பூமி 1 வருடம் எடுத்துக் கொள்கிறது.

சந்திரன் பன்னிரு ராசிகளையும் கடக்க ஒரு மாதம் எடுத்துக் கொள்கிறது. ஒருமுறை சுற்றி முடிக்க பூமி 1 வருடம் எடுத்துக் கொள்கிறது.

அதே போல ஒவ்வொரு மாத்திற்கு ஒரு சிறப்பு நட்சத்திரமுண்டு,

தைப்பூசம், மாசி மகம், ஆவனி அவிட்டம், இப்படி, மாதத்தின் சிறப்பு நட்சத்திரங்கள் வரும் நாட்கள் அனைத்தும் பௌர்னமி தினங்களே! இந்த ஒற்றுமை ஆச்சர்யமூட்டுகிறது

வானவியல் நிகழ்வுகளின் போது பாதிக்கப்படும் கிரகங்கள் சோதிடத்திலும் அதன்படியே எழுதப்பட்டிருக்கின்றன. (உ.ம் ஷூ மேக்கர்/லேவியால் வியாழன் கிரகம் பாதிக்கப் பட்ட போது சோதிடத்தில் குருவின் ஆதிக்கத்திலிருந்தவர்களுக்கு தீய பலனகள் சொல்லப்பட்டது (நடந்ததா என்பது வேறு விஷயம்)

ப்ருஹுத் ஜாதகா, ப்ருஹுத் சம்ஹிதா போன்ற சோதிடக்கலை சம்பந்தப்பட்ட நூல்களில் பூகம்பம், வறட்சி, போர், மழை போன்றவை வர சாத்தியமான கிரக அமைப்புகள் பற்றியெல்லாம் விவாதிக்கப்பட்டுள்ளது

இது போலவே சோதிடத்திலும் வானவியலிலும் உள்ள ஒற்றுமைகளைக் கூற இன்னும் பல உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்

சோதிடம் உண்மையா? பொய்யா? சோதிடர்கள் பொய்யர்களா? இதெல்லாம் எனக்குள் எழும் கேள்விகளல்ல

ட்ரில்லியனுக்கு அப்பால் ஒரு எண் வந்தால் அதை என்ன பெயரிட்டு அழைக்கலாம் என்று தெரியாதவர்கள் சில வருடங்களுக்கு முன் கண்டுபிடித்த வானத்து நட்சத்திரங்கள், ராசி மண்டலங்கள், கிரகங்கள் அவற்றின் சூரியனைச் சுற்றும் கால அளவுகள், ஆகியவற்றைத் தொலைநோக்கி போன்ற வசதிகள் ஏதும் இல்லாத காலத்திலேயே துல்லியமாக கணக்கிட நமது சோதிட மேதைகளால் எப்படி முடிந்தது?