நகைச்சுவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நகைச்சுவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கனவில் வந்த பாலாபாய் (பா.க.ச பதிவு)
Google Buzz Logo

பா.க.ச மக்களே, நேத்து ராத்திரி கனவுல நம்ம பாலாபாய் வந்தாரு. (அவனவனுக்கு நமீதா, திரிஷா, ஜோதிகா, பூமிகா, அசின் இவங்க எல்லாம் கனவுல வருவாங்க. அட, 'சமீபத்துல' பொறந்தவங்களுக்கு கூட அட்லீஸ்ட் ஒரு ஜெயமாலினி, ஜோதிலட்சுமியாவது வருவாங்க... ஹூம்... என் நெலமயப் பாருங்க. )

சரி வந்தாரா... என்ன விசயம்னு கேட்டேன். சொந்தமா ஒரு எழுத்துரு செஞ்சிருக்கறதா சொல்லி அதைப் பயன்படுத்திப் பாத்து கருத்து சொல்ல சொன்னாரு. என்னடா இது... நாம இருக்குற எல்லா எழுத்துருவையும் ஒருங்குறிக்கு மாத்தச் சொல்லி பாக்குற எல்லாரையும் கேட்டுக்கிட்டு இருக்கோம்... இவர் என்னாடான்னா அவரே உருவாக்கி தராரே அப்படின்னு ஒரே சந்தோசமாயிடுச்சி.

சரின்னு நானும் அந்த எழுத்துருவை நிறுவி டைப் பண்ணிப் பாத்தேன். அது என்னடான்னா, எந்த கீயை தட்டினாலும் 'பா.க.ச... பா.க.ச... பா.க.ச...' இதத் தவிர வேற எதுவுமே வரமாட்டேங்குது.

அப்படி என்னத்தை இந்த எழுத்துருவில மாத்தியிருக்காருன்னு பாத்தா... அந்தக் கொடுமைய நான் ஏன் சொல்லனும்... நீங்களே பாருங்க...


அப்புறமா போன் பண்ணி அது என்னங்க காப்பி லெப்டு, ரைட்டு, டாப்பு, பாட்டம் அப்படின்னு பாலாபாய் கிட்ட கேட்டேன். அதுக்கு அவர் சொன்னது:

"அதாவது, ரைட்டு கை பக்கமா இருந்து காப்பி அடிச்சா அது காப்பிரைட்டு. லெப்டு கை பக்கமா இருந்து காப்பி அடிச்சா அது காப்பிரைட்டுலெப்டு. மேல இருந்து காப்பி அடிச்சா அது காப்பிடாப்பு, கீழ இருந்து காப்பி அடிச்சா அது காப்பிபாட்டம்"

இந்த விளக்கத்தை கேட்டு அப்படியே எனக்கு புல்லரிச்சி போச்சிங்க. உங்களுக்கு ?

வேலை.. வேலை.. வேலை..
Google Buzz Logo

சக பணியாளர்களை பணிநீக்கம் செய்துவரும் நிறுவனத்தில் வேலை பயத்தில் சிலர் உதிர்த்தது:

சூர்யா:தன்னம்பிக்கைக்கும் தலைக்கணத்துக்கும் நூலளவுதான் வித்தியாசம். என்னையும் வேலைய விட்டு தூக்கமாட்டாங்கன்னு சொன்ன அது தன்னம்பிக்கை! என்னை மட்டும் வேலைய விட்டு தூக்கமாட்டாங்கனு சொன்னா அது தலைக்கணம்!

வடிவேல்:எவ்வளவு நேரந்தான் வேலைல இருக்கற மாதிரியே நடிக்கறது.
நீங்க அவங்கள ஒன்னுமே பண்ணலையா?
வடிவேல்: எத்தினி வாட்டி வேலைய விட்டு தூக்கி்னாலும் வேலைக்கு வர்றான்டா.. இவன் ரொம்ப நல்லவன்னீட்டாம்மா..

ரஜினி: கண்ணா, எப்ப வேலைக்கு வருவேன் எப்டி வருவேன்னு தெரியாது. ஆனா வரவேண்டிய நேரத்துல கரக்ட்டா வந்துடுவேன்.

அதிகமா வேலை செஞ்ச பொம்பளையும் கம்மியா சம்பளம் வாங்கின ஆம்பளையும் ஒரு கம்பெனியில இருந்ததா சரித்திரம் கெடியாது.

(அதெல்லாம் இருக்கட்டும் சார்.. நூறு பேரை வேலைய விட்டு தூக்கனும்னா என்ன செய்யலாம் சார்?)

கலைஞர்: உடன்பிறப்பே, கவலை தோய்ந்த உன் முகம் என் கண்ணை விட்டு அகலாத வேளையிலே உனது வேலை பற்றி அம்மையாரின் அராஜக ஆட்சி எடுத்த இந்த முடிவுக்கு வருகிற தேர்தலில் தமிழக மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள். இந்த இடத்தில் உனக்கு இடமில்லை என்று அம்மையார் சொல்கிறார். நாங்கள் ஆட்சியில் இருந்த போது மட்டுமல்ல எப்போதும் என் இதயத்திலே உனக்கு இடமுண்டு என்பதை நீ கருத்தில் கொள்வாய்.

குங்குமம் விளம்பரம்: கேன்டீன் சாப்பாடுன்னா சும்மாவா? குமுறுகிறார் கொழுக் மொழுக் கணிப்பொறியாளர் கனிகா. இந்த வாரமாவது வேலை இருக்குமா? மென்பொருள் பொறியாளர்கள் தூக்கம்!
வாங்கிவிட்டீர்களாாாாாா!

இரண்டு ஜோக்குகள்
Google Buzz Logo

ஒன்றுக்கொன்று தொடர்புடையவையோ இல்லாதவையோ

இந்தப் பதிவில் Blogger குளறுபடிகள் காரணமாய் இதை மீண்டும் மீண்டும் மறுபதிவு செய்துள்ளேன்.

*********************************

ஒரு பூங்காவில் வயதான ஒருத்தர் உட்கார்ந்து அழுது புலம்பிக்கிட்டு இருந்தார்.

அவரு கிட்ட போயி "என்னங்க விஷயம்"ன்னு கேட்டேன்

"போன மாசம் தான் ரிட்டயரு ஆனேன். ஏகப்பட காசு வந்துச்சி நெறய சொத்து, காரு இருக்கு, அருமையான மனைவி, புள்ளைங்க எல்லாம் இருக்காங்க, வேளாவேளைக்கு அருமையான சாப்பாடு போட்டு என்னை அருமையா கவனிச்சுக்குவாங்க"ன்னாரு

"அப்றம் ஏங்க இங்க ஒக்காந்து அழுதுகிட்டு இருக்கீங்க"ன்னு கேட்டேன்

"என் வீட்டுக்கு போற வழி மறந்து போயிட்டேன்"ன்னாரு

*********************************

ஒரு மருத்துவர் மனநோயாளியைப் பரிசோதிச்சிக்கிட்டு இருந்தாரு

ஒரு வட்டம் வரைஞ்சி "அது என்ன"ன்னாரு

அதுக்கு அவன் "ஒரு பொண்ணு துணியில்லாம இருக்கா"ன்னான்

அப்றம் அவர் ஒரு சதுரம் வரைஞ்சி "அது என்ன"ன்னாரு

அதுக்கு அவன் "ஒரு பொண்ணு துணியில்லாம படுக்கையில படுத்திருக்கா"ன்னான்

அப்றம் அவர் ஒரு முக்கோணம் வரைஞ்சி "அது என்ன"ன்னாரு

அதுக்கு அவன் "ஒரு பொண்ணு துணியில்லாம படுக்கையில ஒரு ஆளோட படுத்திருக்கா"ன்னான்

அதிர்ந்து போன அவர் "ச்சே! என்ன ஆளுய்யா நீ... இவ்வளவு அசிங்கமா சிந்திக்கறே"ன்னாரு

உடனே அவன் சொன்னான் "நீ மட்டும் என்ன.. நானும் அப்போலேர்ந்து பார்த்துக்கிட்டு இருக்க்கேன் அசிங்கம் அசிங்கமா வரைஞ்சிக்கிட்டு இருக்கே"

எரிதங்கள் வாழ்க
Google Buzz Logo

மின்னஞ்சல் எரிதங்களும் மின்னஞ்சல் சங்கிலித் தொடர்களும் எரிச்சலூட்டக் கூடியவை என்றாலும் அவற்றால் கிடைக்கும் பயன்கள் ஏராளம்!

அவற்றால் நான் அறிந்த சில விஷயங்கள்:

  1. கோக் குடிப்பதற்கு மட்டுமல்ல (கழிவறையைக் கழுவவும் பயன்படும். )
  2. திரையரங்கில் எயிட்ஸ் ஊசி இருக்கும் (என்பதால் திரைப்படம் பார்க்க திரையரங்குக்கு போக வேண்டியதில்லை)
  3. வாசனைத் திரவியங்கள் மூலம் புற்றுநோய் வரும் (ஆனா இப்ப கப்படிக்குதுங்க... )
  4. தனியா கார்ல போனா மயக்க மருந்து குடுத்து கொள்ளையடிச்சிடுவாங்க (காருக்கு போடுற பெட்ரோல் இப்பல்லாம் மிச்சம்)
  5. டின்ல அடைச்சி விக்குற எல்லா உணவுலயும் எலியோட எச்சங்கள் கலந்து வருது (டின்ல விக்கறதெல்லாம் வாங்கறதுக்கு காசு இல்லீங்கோவ்)
  6. போன்ல சில நம்பருக்கு டயல் செஞ்சா அத வச்சி அவுங்க நம்ம போனைப் பயன்படுத்தி வெளிநாட்டுக்கெல்லாம் கால் பண்ணீடுவாங்க (மூனு மாசமா கால் பண்ணாம வாடகை மட்டும் கட்டுறனுங்க)
  7. பார்டிக்கெல்லாம் போனா சில அழகான பொண்ணுங்க வசிய மருந்து குடுத்து மயக்கிடுவாங்க(பெரிய மன்மதன்னு நெனப்பு.. நம்மையெல்லாம் யாருங்க மயக்கப் போறாங்க...)
  8. என்கிட்ட இருந்த எல்லா காசையும் ஏமி புரூஸுக்கு தானம் குடுத்துட்டேன் (பாவம் இந்த பொண்ணு, தீராத வியாதியால 1993ல இருந்து பல முறை ஒரு வாரத்துல செத்துக்கிட்டு இருக்கு)
  9. மின்னஞ்சல் அனுப்பினா யாஹூ, மைக்ரோசாப்ட், AOL, எல்லாம் ஆளாளுக்கு ஒரு மின்னஞ்சலுக்கு 2 ரூபா குடுப்பாங்க.. (ஆனா அது கூடிய சீக்கிரம் வந்துகிட்டே இருக்குதுங்க)
  10. மின்னஞ்சல் அனுப்பினா இலவச நோக்கியா மொபைல்.. டிஸ்னி வோர்ல்டுக்கு இலவச அனுமதி.. எல்லாம் கெடைக்கும்.. (கெடச்சா யாராவது.. எனக்கும் ஒன்னு குடுங்களேன்)
  11. வங்கிக் கணக்கு எண் குடுத்தா பல்கேரியாவுல ராஜ பரம்பரையச்சேர்ந்த ஒருத்தர் அவரோட பரம்பரை சொத்துல இருந்து கோடிக் கணக்குல பணம் அனுப்புவாரு(இதுக்காகவே புதுசா காசே இல்லாம ஒரு கணக்கை தொடங்கி வச்சி காசு வரும்னு காத்துக்கிட்டு இருக்கனுங்க)
  12. மதுரை மீனாட்சி கோயிலை உலக அதியசயத்துல ஒன்னா ஆக்கனும்னா ஆளுக்கு ஒரு போன் ஓட்டு போட்டாப் போதும் (எங்க வீட்ட உலக அதிசயமா ஆக்கலாம்னு ஒரு யோசனை..)
  13. திருப்பதி வெங்கடாஜலபதி கிட்ட மின்னஞ்சல் முகவரி.. இணைய இணைப்பு எல்லாம் இருக்கு . (அப்பப்ப அவரு அனுப்பற மின்னஞ்சலை எல்லாருக்கும் அனுப்பினா நேரா சொர்க்கம்தான் நமக்கு)

முக்கிய அறிவிப்பு: இந்த பக்கத்தின் சுட்டியை ஒரு மின்னஞ்சலில் 1246 பேருக்கு உடனே அனுப்பலைன்னா இன்னிக்கு சாயந்திரம் 6:30 மணிக்கு உங்க தலை மேல காக்கா அசிங்கம் பண்ணீரும்... ஜாக்கிரதை!

பின் குறிப்பு: ஹி..ஹி வேற ஒன்னுமில்லீங்க.. எரிதங்களால் வெறுத்துப் போன நண்பர் ஒருவர் அனுப்பின எரிதத்தின் தமிழாக்கம் இது.

சின்னபுள்ளத்தனமா இல்ல இருக்கு - 2
Google Buzz Logo

போட்டோ

பள்ளிக்கூடத்துல ஒரு வகுப்புல எல்லாரையும் நிக்க வச்சி குரூப் போட்டோ எடுத்துக்கிட்டிருந்தாங்க. எடுத்து முடிச்சதும் அதை எல்லா மாணவர்களையும் வாங்க வைக்கனும்னு நெனச்ச டீச்சர் "ஆகா! எல்லாரும் இந்த போட்டோவ வாங்கி வச்சி, பெரியவங்களா ஆனப்புறம் பாத்தா எப்படி இருக்கும்! இதோ பாரு ரமேஷ், இப்ப இவன் டாக்டர்! இதோ பாரு சுரேஷ், இப்ப இவன் வக்கீல்.. இப்டி சொல்லிப் பாத்தா எவ்வளவு சந்தோஷமா இருக்கும்"

சொல்லி முடிக்கறதுக்குள்ள கடைசி டெஸ்க்ல இருந்து குரல் மட்டும் வந்தது "இதோ பாரு டீச்சர்.. இப்ப இவங்க உயிரோட இல்ல"ன்னு.

ரத்தம்

ஒரு டீச்சர் ரத்தத்தைப் பத்தி பாடம் எடுத்துக்கிட்டு இருந்தாங்க.

டீச்சர்: நான் தலைகீழா நிக்கும் போது ரத்தம் தலைக்கு போய் மூஞ்சி செவப்பா ஆகுது இல்லையா?
பசங்க: ஆமா டீச்சர்!
டீச்சர்: அப்படின்னா நான் நேரா நிக்கும் போது ஏன் காலுக்கு ரத்தப் போய் செவப்பா ஆவறதில்லை?
பசங்க: ஏன்னா உங்க காலு காலியா இல்லை டீச்சர்!

கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார்

மதிய உணவு நேரம்,

பெரிய மேஜையில் பல விதமான உணவை வைத்து பசங்களை எடுத்து போட்டு சாப்பிட சொன்னாங்க. ஆப்பிள் வச்சிருந்த இடத்துல "ஒரு ஆப்பிள் மட்டும் எடுத்துக் கொள்! கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார்" அப்டின்னு போர்டு வச்சிருந்தாங்க.

அந்த மேஜையின் இன்னொரு கடைசியில ஐஸ்கிரீம் வச்சிருந்த இடத்துல யாரோ ஒரு குறும்பு குழந்தை "எவ்வளவு வேணுமோ எடுத்துக்கோ! கடவுள் ஆப்பிளைப் பார்த்துக்கிட்டு இருக்கார்"ன்னு கிறுக்கி வச்சிருந்தது

பி.கு: மேற்கண்ட கதைகள் ஒரு ஆங்கில மின்னஞ்சலில் எனக்கு அனுப்பப் பட்ட குட்டிக்(குழந்தை) கதைகளின் தமிழாக்கம்

சின்னபுள்ளத்தனமா இல்ல இருக்கு - 1
Google Buzz Logo

திமிங்கலம்

ஒரு டீச்சர், திமிங்கலத்தைப் பத்தி பாடம் எடுத்துகிட்டிருந்தாங்க. ஒரு குட்டிப் பொண்ணு "டீச்சர், ரமேஷோட அப்பா கடலுக்கு போனப்போ அவரைத் திமிங்கலம் முழுங்கிடிச்சி"ன்னா.

டீச்சர் உடனே கோவமா "என்ன கவனிச்ச நீ? இப்பத்தான் திமிங்கலத்தோட தொண்டை ரொம்பச் சின்னது அதால மனுசனை முழுங்க முடியாதுன்னு சொன்னேன்"ன்னாங்க.

அதுக்கு அந்தக் குட்டிப் பொண்ணு "நம்பலைன்னா போங்க டீச்சர், நான் செத்தப்புறம் சொர்கத்துக்கு போயி ரமேஷோட அப்பா கிட்ட கேட்டுக்கறேன்"ன்னா.

அதுக்கு டீச்சர் "ரமேஷோட அப்பா நரகத்துல இருந்தா என்ன பண்ணுவே"ன்னாங்க. உடனே குட்டிப் பொண்ணு "நீங்க செத்தப்புறம் போயி கேட்டுக்கங்க"ன்னா.

கடவுள்

ஒரு வரைகலை வகுப்புல குழந்தைகள் கிட்ட பென்சில் பேப்பர் எல்லாம் கொடுத்து எதையாவது வரையச் சொல்லியிருந்தாங்க. ஒவ்வொரு குழந்தையும் என்ன வரையுதுன்னு பாத்துகிட்டே வந்த டீச்சர் ஒரு குழந்தை என்ன வரையுதுன்னு கண்டுபிடிக்க முடியாம கொஞ்ச நேரம் பாத்துட்டு அந்தக் குழந்தைய "என்ன வரையுற நீ"ன்னு கேட்டங்க.

அதுக்கு "கடவுளை வரையுறேன்"ன்னுச்சி அந்த குழந்தை.

"கடவுளைத்தான் இது வரைக்கும் யாருமே பாத்ததில்லையே"ன்னாங்க டீச்சர்

"இன்னும் கொஞ்ச நேரத்துல எல்லாரும் பாப்பாங்க"ன்னுச்சி அந்த குழந்தை.

நரைச்ச முடி

ஒரு நாள் அம்மா சமையல் எல்லாம் முடிச்சி பாத்திரம் கழுவிக்கிட்டு இருக்கும் போது குட்டிப் பொண்ணு அம்மாவோட முடியில சிலது நரைச்சி போனதப் பாத்துட்டு எப்படி நரைச்சிப் போச்சின்னு கேட்டுச்சி

அதுக்கு அம்மா "ஒவ்வொரு முறை நீ என் பேச்சை கேக்காம தப்பு பண்ணும் போதும் எனக்கு ஒரு முடி நரைச்சிடும்"ன்னாங்க

கொஞ்ச நேரம் யோசிச்சிட்டு அந்த சின்னப் பொண்ணு "இப்பத்தான் தெரியுது! பாட்டிக்கு எப்படி எல்லா முடியும் நரைச்சிப் போச்சி"ன்னு சொல்லீட்டு ஓடியேப் போயிடுச்சி


பி.கு: மேற்கண்ட கதைகள் ஒரு ஆங்கில மின்னஞ்சலில் எனக்கு அனுப்பப் பட்ட குட்டிக்(குழந்தை) கதைகளின் தமிழாக்கம்

வலைப்பூ உலகில் ஒரு கீதோபதேசம்
Google Buzz Logo

முன்குறிப்பு:கிண்டல்/நகைச்சுவை உணர்வில்லாத யாரும் இந்தப் பதிவை படிக்க வேண்டாம். படிச்சி முடிச்சிங்கன்னா ரொம்ப யோசிக்காம போயிட்டே இருக்கனும்! ஆமா!

கிஷ்டன்: குர்ஜுனா! இணையச் சேவைகளை மதிக்கக் கற்றுக் கொள்! வலைப்பூக்களில் அனானிமஸாய்ப் புகுந்து வலைப்பதிவர்களை கடைமட்ட வார்த்தைகளில் பின்னூட்டமிட்டு திட்டத் தயங்காதே!

குர்ஜுனன்: ஆனால் கிஷ்டா! வலைப்பூ வைத்திருப்போர் என் அருமை நண்பர்கள், தமிழ்மணத்தை எனக்கு அறிமுகப்படுத்திய பெரியோர்கள், வல்லுனர்கள், அவர்களுக்கெல்லாம் எப்படி நான் இத்தகைய பின்னூட்டம் இடுவேன்.

கிஷ்டன்: குர்ஜுனா! இந்தக் கணத்தில் உனக்கு எதிரியோ நண்பனோ யாரும் இல்லை. அவர்கள் எல்லோரும் வலைப்பதிவர்கள். எனவே, இணைய தர்மத்தை கடைப்பிடிப்பாயாக! எல்லோருக்கும் பின்னூட்டம் இடு முடிந்தவரையில் திட்டு! அதுதான் உன் கர்மம்! அதுவே தர்மமும் ஆகும்.

குர்ஜுனன்: கிஷ்டா! இவையெல்லாம் பார்த்தால் இணைத்தின் இணைப்பையே துண்டித்துக் கொள்ளத் தோன்றுகிறது

கிஷ்டன்: குர்ஜுனா! வலைப்பூ என்னும் மாயையில் சிக்கிக் கொண்டுள்ளாய். இந்த மாய உலகில் நீயும் மாயை உன்னால் திட்டப் படுபவரும் மாயை. வலைப்பூக்கள் தோன்றும் முன்பிருந்தே இது போல ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வது குழுமங்களிலும் மற்ற வலைத்தளங்களிலும் இருந்துள்ளது. நீ செய்யாவிட்டாலும் இதை வேறொருவர் செய்வார். கீழ்த்தரமாய் பின்னூட்டம் இடுவது உன் கடமை! அதைச் செய்!

குர்ஜுனன்: ஆனால் கிஷ்டா!

கிஷ்டன்:குர்ஜுனா! திட்டப் படுபவர் அதைக் கண்டுகொள்ளவில்லை என்றாலும் அதைப்பற்றியெல்லாம் கவலைப் படாதே! உனக்குத் தெரிந்த மூன்றாம் தர வார்த்தைகளையும் கேவலமான சிந்தனைகளையும் உலகுக்கு தெரியவைக்கத் தவறிவிடாதே!

குர்ஜுனன்: கிஷ்டா! கீழ்த்தரமாய் பின்னூட்டம் இட்டு, திட்டுவதற்கும் சாதி மத பேதங்களுக்கும் என்ன சம்பந்தம்.

கிஷ்டன்: குர்ஜுனா! இரண்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உனக்கும் இன்னொருவருக்கும் மனக்கசப்பு என்றால் முதலில் சாதியைக் கொண்டு திட்டவேண்டும். அப்போது தான் சாதி சார்பாக இன்னும் சில பேர் திட்டுவதற்காக அணி திரள்வார்கள். இப்படியாக ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ளும் போது பல விதமான மூன்றாம் தர வார்த்தைகள் வலைப்பூ உலகின் வருகையாளருக்கு அறிமுகமாகும். இதனால் தமிழ் மொழி அபரிமிதமான வளர்ச்சியடையும்.

குர்ஜுனன்: கிஷ்டா! மூன்றாம் தர வார்த்தைகள் என்பதை எப்படி அடையாளம் கண்டு கொள்வது.

கிஷ்டன்: இத்தகைய வார்த்தைகள் உடனடியாய் எதிராளியைக் காயப் படுத்த வல்லவை. இந்த வார்த்தைகளால் மனம் பாதிக்கப் பட்டவர்களை வழக்காடு மன்றம், வழக்கறிஞர் என்றெல்லாம் சிந்திக்க வைக்குமளவுக்கு கொடூரமானவை.

குர்ஜுனன்: கிஷ்டா! திட்டுவோருக்கு இதனால் என்ன பலன்.

கிஷ்டன்: குர்ஜுனா! எல்லாம் மாயை! திட்டும் போது எழுவது ஒரு அல்ப சந்தோசம். சாதியால், மதத்தினால், இன்ன பிற காரணங்களால் வலைப்பூவுலகம் பிளவுற்று, தரமான படைப்புகள் குறைந்திடும் போது இந்த அல்ப சந்தோசம் அதிகரிக்கும். இந்தத் திட்டுக்கள் சண்டைகள் தொடர்பான பதிவுகளைத் தேடித்தேடிப் படிக்கையில் அது பலமடங்கு பெருகி பிறந்த பலனை அடைந்த இன்பம் கிடைக்கும். ஆனால் இவை எல்லாம் மாயை என்பதை யாரும் அறியார். உனது கடமை யாரையேனும் திட்டிப் பின்னூட்டம் இடுவது! இதை எப்போதும் உன் மனதில் வை!

குர்ஜுனன்:கிஷ்டா!திட்டும் போது என்னை யாருமே கண்டுகொள்ளவில்லை என்றால் என்ன செய்ய?

கிஷ்டன்: இந்த வலைப்பூ உலகம் என்னும் மாயையில் திட்டுவது எப்படி உன் கடமையோ அது போலவே உன்னோடு அணி சேர்வது சிலரது கடமை.உன் எதிரணியில் சேர்வது இன்னும் சிலரின் கடமை. எனவே பயம் ஏதும் கொள்ளாமல் உன் கடமையைச் செய்!

குர்ஜுனன்: கிஷ்டா! அறியாமையில் உழன்று கொண்டிருந்த என் கண்களைத் திறந்திட்டாய். வணங்குகிறேன்.

(கிஷ்டனின் உபதேசத்தில் மனம் தெளிவடைந்த(!) குர்ஜுணன் அடுத்த சாதிச் சண்டைக்கு பின்னூட்டமிட செல்கிறான்)

பின் குறிப்பு: இந்தப் பதிவு யார் மனதையும் புண்படுத்த அல்ல. என்னை அறியாமல் யார் மனதையேனும் புண்படுத்தியிருந்தால் மன்னிக்க.

இதுக்கும் டாட்டாவுக்கும் சம்பந்தமில்லை
Google Buzz Logo

ஹி. ஹி. சும்மா உலூலூவாய்க்கு...



அட இதுவும் தமிழ் வலைப்பூ தானுங்க (என்ன சொன்னாலும் தமிழ்மணத்துக்கு புரியமாட்டேங்குதுப்பா.)

ஹூம்... இப்படி ரெண்டு மூனு வரி தமிழ்ல போட்டா தமிழ்மணம் பட்டியல்ல வருதான்னு பாக்கலாம்...

நிலநடுக்கமும் சுனாமியும் - ஒரு அலசல்
Google Buzz Logo

நிலநடுக்கமும் சுனாமியும ஏன் வருதுன்னு எல்லாரும் ஆளுக்கொரு பக்கம் விளக்கம் சொல்ல ஆரம்பிச்சிட்டங்க.

நிறைய காமெடியனுங்க அதை முன் கூட்டியே சொன்னேன்னு வேற பத்திரிக்கை/தொலைக்காட்சியில பேட்டி கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க.

கொஞ்சம் யோசிச்சி பாத்ததுல சுனாமி, நிலநடுக்கம் இதுக்கெல்லாம் முக்கியமான காரணம் எதுன்னு தெரிய வந்தது. எதுன்னு கேக்கறீங்களா? எதுன்னு சொல்றதுக்கு முன்னாடி..

பேண்ட் போட்டுக்கற பழக்கம் இருக்கறவுங்க கவனிச்சி பாத்தீங்கன்னா ஒரு காலை முதலில் நுழைத்து அடுத்த காலை அப்புறமா நுழைத்து போடுவாங்க. இது ஏன்னு பாத்தா அதுக்கு பின்னால ஒரு பெரிய கதையே இருக்குதுங்க.

உதாரணமா, தமிழ்நாட்டுல ஒருத்தர் காத்தால குளிச்சிட்டு ரெண்டு காலையும் ஒரே சமயத்துல தூக்கி பேண்ட்க்குள்ள குதிச்சி ரெடியாவுறார்ன்னு வையுங்க, குதிக்கும் போது அவர் நிலத்துல ஒரு சின்ன அதிர்ச்சியை ஏற்படுத்துறாரு. இது மாதிரியே எல்லாரும் குதிச்சாக்க அந்த அதிர்ச்சி அப்படியே வளர்ந்து பெரிய அதிர்ச்சியா மாறி (பூமி சுத்துறதுனால) கிழக்கு பக்கமா நகர்ந்து போவும்.

கொஞ்ச நேரம் கழிச்சி பாத்தா ஆப்பிரிக்கா,ஐரோப்பாவுல எல்லாம் விடிஞ்சிரும். அங்கேயும் இதே மாதிரி எல்லாரும் குதிச்சி குதிச்சி பேண்ட் போட்டாங்கன்னு வச்சிக்கங்க, ஏற்கனவே நகர்ந்து வந்த அதிர்ச்சியும் இந்த அதிர்ச்சியும் சேர்ந்து பலமடங்கு அதிகமான அதிர்ச்சியாகும் .

அப்றம் இதே மாதிரி அமெரிக்காவுல, ஜப்பான்ல எல்லாம் குதிச்சி குதிச்சி பேண்ட் போட்டாங்கன்னு வச்சிக்கங்க, தென்கிழக்காசியாவுல விடியும் போது எல்லா அதிர்ச்சியும் சேர்ந்து பெரிய நிலநடுக்கமா மாறி தென்கிழக்காசிய கடல் பகுதியில தாக்கும்.

கடல் அதிரும்போது அது சுனாமியை ஏற்படுத்தி அப்படியே நகர்ந்து வந்து தமிழ்நாடு இலங்கை, அந்தமான் இப்படி எல்லா பகுதியையும் தாக்கிடும்.

இப்படியெல்லாம் ஏற்படாம இருக்கனும்னுதாங்க எல்லாரும் முதல்ல ஒரு கால்ல பேண்ட் மாட்டிட்டு அப்புறமா ரெண்டாவது கால்ல பேண்ட் மாட்டனும்ங்கறாங்க.

என்னது? ஆட்டோ அனுப்பறீங்களா? ஐய்யையோ! எஸ்கேப்!!

பி.கு: யாரும் சீரியஸா எடுத்துக்கிட்டு சண்டைக்கு வராதீங்க. உலகத்துல எதையாவது/யாரையாவது கொஞ்சம் கூட வருத்தமடையச் செய்யாத ஜோக் இன்னும் யாருமே என்கிட்ட சொல்லலீங்க.

விடுமுறையில் செல்கிறீர்களா - 2
Google Buzz Logo

கிறிஸ்மஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டுக்காக விடுமுறையில் செல்லத் தீர்மானிக்கிறீர்களா? இந்நேரம் விடுமுறையில் செல்கிறீர்களா - 1ல் சொன்ன யோசனைகளின் படி மின்னஞ்சல் பதிலிகளை தயார் செய்துவிட்டிருப்பீங்க.

அலுவலகத்தில் எல்லாவற்றையும் முடித்து அழகாக அடுக்கிவிட்டு செல்லத் தயாராக இருப்பீங்க. எதுக்கும் ரொம்ப நாள் விடுமுறையில் போகாதீங்க இல்லைன்னா நீங்க திரும்பி வரும் போது உங்க மேஜையும் அறையும் இப்படி இருந்தா ஆச்சரியப்படுறதுக்கில்லை








என்ன... எல்லாத்தையும் தூக்கி குப்பையில போடாம ஒன்னொன்னா படிச்சிப் பாக்கனும்னாதான் கஷ்டம்!

இனிய கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

விடுமுறையில் செல்கிறீர்களா - 1
Google Buzz Logo

கிறிஸ்மஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டுக்காக விடுமுறையில் செல்லத் தீர்மானிக்கிறீர்களா?

உங்களுக்கு உதவ சில மின்னஞ்சல் பதிலிகள் இதோ:

1) ஒரு நேர்முகத்தேர்வுக்காக விடுமுறையில் செல்கிறேன். அந்த வேலை கிடைக்காவிட்டால் உங்களுக்கு பதிலளிக்கிறேன்.

2) நிஜம்மா நான் விடுமுறையில் இல்லை. உங்களுக்கு பதில் அளிக்க விருப்பமில்லை அவ்ளவுதான்.

3) நான் அலுவலகத்தில் இல்லாததால் இந்த பதிலியை பெறுகிறீர்கள். இல்லையென்றால் இது கூட அனுப்பியிருக்கமாட்டேன்.

4) என் மூளையை எடுத்துட்டாத்தான் மேலாளராக்குவேன்னு சொல்லிட்டாங்க. அதனால அறுவை சிகிச்சைக்கு விடுமுறையில போறேன்.

5) விடுமுறையிலிருந்து திரும்பி வரும்வரை உன்னை மாதிரி வேலையத்தவங்க அனுப்புற உபயோகமில்லாத மின்னஞ்சலையெல்லாம் அழிக்க முடியாது. வந்ததும் அழிச்சிடுறேன், என்ன?

6) உங்கள் மின்னஞ்சலுக்கு நன்றி. நீங்கள் அனுப்பிய முதல் 10 வார்த்தைகளுக்கு ரூ.50, அதற்கு மேல் ஒவ்வொரு வார்த்தைக்கும் ரூ.10 உங்கள் கிரடிட் கார்டிலிருந்து கழிக்கப்பட்டது.

7) நன்றி. உங்கள் மின்னஞ்சல் எண் 999. சுமாராக 5 வாரங்களுக்கு பிறகு உங்கள் மின்னஞ்சல் படிக்கப்பட (அல்லது அழிக்கப்பட) வாய்ப்புள்ளது.

8) உங்கள் மின்னஞ்சல் சரியாக வந்தடையவில்லை. உங்கள் கணினியை ஒருமுறை ரீ-பூட் செய்துவிட்டு மீண்டும் ஒருமுறை மின்னஞ்சல் அனுப்பவும். (விடுமுறை விட்டு வந்து பாத்தா திரும்பத் திரும்ப இதே மாதிரி சில மின்னஞ்சல்கள் உங்களுக்கு வந்திருக்கும்)

9) உங்கள் மின்னஞ்சல் கிடைத்தது. இந்த பதிலி கிடைத்ததா என்று பதில் மின்னஞ்சல் அனுப்பவும்.

10) நீங்க அனுப்பிய மின்னஞ்சல் பத்திதான் யோசிச்சிட்டிருக்கேன். எங்கேயும் போயிடாம கணினிக்கு பக்கத்துலயே இருங்க, கூடிய சீக்கிரம் பதில் அனுப்புறேன்.

11) புது வேலைக்கு சம்பளம் எவ்வளவுன்னு பேசிக்கிட்டிருக்கேன். கவலைப்படாம தகவல் எதுனா இருந்தா சொல்லுங்க.

12) நான் வேற சர்க்கஸ்ல சேந்துட்டனுங்க.

13) மருத்துவக் காரணங்களுக்காக விடுமுறையில் சென்றுள்ளேன். திரும்பி வரும்போது என்னை 'அர்ஜுன்' என்பதற்கு பதிலாக 'அவ்வை சண்முகி' என்றழைக்கவும்.

காதலும் கல்யாணமும்
Google Buzz Logo

ஒரு ஊர்ல ஒரு (நிஜமாவே ரொம்ப நல்ல) சாமியார் இருந்தார். ஒவ்வொரு நாளும் மாலை சில மணிநேரம் மக்களை சந்திக்கறது அவர் வழக்கம். ஒரு நாள் அவர் கிட்ட ஒரு இளைஞன் வந்தான். அவன் வெகுநேரம் ஏதும் பேசாம ஓரமா நின்னுகிட்டிருந்தான்.

எல்லோரும் போனப்றம் அவன் அந்த சாமியார் கிட்ட போய் "சாமி, உங்க கிட்ட இதக் கேக்கலாமான்னு தயக்கமா இருக்கு, இருந்தாலும் எனக்கு வேற யாரும் சிறப்பா விளக்க முடியுமான்னு தெரியல. காதல்னா என்ன?" அப்பிடின்னான்

அதுக்கு அந்த சாமியார் "தம்பி, ஆசிரமத்துக்கு எதிர்ல ஒரு பெரிய கரும்புத் தோட்டம் இருக்கு, அதுல இறங்கி நடந்துக்கிட்டே போ, இருக்கிறதுலயே பெரிய கரும்பாப் பாத்து வெட்டிகிட்டு வா, காதல்னா என்னன்னு அப்றம் சொல்றேன். ஞாபகம் வச்சிக்க, திரும்பிப் பாக்காம நடந்து போய் கரும்பு வெட்டி முடிச்சப்றம் திரும்பி வா"ன்னாரு

கொஞ்ச நேரம் ஆச்சு. போனவன் வெறுங்கையோட திரும்பி வந்தான். சாமியார் "என்னப்பா? பெரிய கரும்பு எதுவும் சிக்கலையா ?"ன்னு கேட்டார்.

"வழியில சில பெரிய கரும்புங்களைப் பாத்தேன் சாமி ஆனா அதவிட பெரிசு இன்னும் கொஞ்சம் தூரத்துல இருக்குமோன்னு சந்தேகத்துல தோட்டத்தோட கடைசி வரைக்கும் போனேன், கடைசியில பெரிய கரும்பு ஏதும் இல்ல" அப்டின்னான்

"காதலும் அப்படித்தான், அதுவா நம்ம வழியில வரும்போது நமக்கு அது பெருசா தெரியாது, ஆனா காலம் கடந்து போனப்புறம் நாம தேடுனா கெடைக்காது"ன்னாரு சாமியார்.

"சாமி. இன்னோரு சந்தேகம், கல்யாணம்னா என்ன" அப்டின்னான்

அதுக்கு அவரு "ஆசிரமத்துக்கு பின்னால தேக்கு மரத்தோப்பு இருக்கு, போயி இருக்கறதுலயே பெரிய தேக்கு மரத்தை வெட்டி வண்டியில போட்டு எடுத்து வா, முன்ன மாதிரியே திரும்பிப் பாக்காம போய் வரனும். அப்றம் சொல்றேன் கல்யாணம்னா என்னன்னு" அப்டின்னாரு

கொஞ்ச நேரம் போனப்றம் அவன் ஒரு வண்டியில ஒரு தேக்கு மரத்தை போட்டு எடுத்து வந்தான். பார்த்தா அப்படி ஒன்னும் பெரிய மரமாத் தெரியலை.

சாமியார் "என்னப்பா இதுதான் நீ பாத்ததுலயே பெரிய மரமா?"ன்னாரு

அவன் "இல்லைங்க சாமி, போன தடவை மாதிரி இந்த தடவையும் ஏதும் கெடைக்காம போயிறக் கூடாதுன்னு முதல்ல பாத்த மரங்கள்ல பெரிசா இருந்ததை வெட்டிகிட்டு வந்தேன், அப்றம் கொஞ்ச தூரம் உள்ளே போய் பாத்தா இத விட பெரிய மரமெல்லாம் இருந்தது" அப்டின்னான்.

"இப்படி நம்முடைய எதிர்பார்ப்பையெல்லாம் மூட்டைகட்டி வச்சிட்டு எதோ ஒன்னு கெடைச்சாப் போதும்னு பண்ணிக்றதுதான் கல்யாணம். சில சமயம் நீ வெட்டினதே பெரிய மரமா இருக்கலாம், ஆனா பல சமயம் பெரிய மரம் வேற எங்கயாவது இருக்கும்"ன்னாரு

பூங்கொத்தும் மலர் வளையமும்
Google Buzz Logo

ஒரு வியாபாரி தனது புதிய நிறுவனத்தை ஆரம்பிக்க இருந்தார். அவருக்கு அவரது நண்பர் ஒரு பூங்கொத்தை அனுப்பச் சொல்லி பூங்கொத்து விற்பனையாளரிடம் சொல்லியிருந்தார்.

நிறுவனத் துவக்க தினத்தன்று பூங்கொத்துக்கு பதிலாக 'உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்' என்ற வாசகத்துடன் மலர்வளையம் வந்தது. வியாபாரி மிகுந்த கோபத்தோடு பூங்கொத்து விற்பனையாளருக்கு தொலைபேசி செய்து திட்டினார்.

அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்ட பூங்கொத்து விற்பனையாளர். "நீங்களாவது பரவாயில்லை. இன்னிக்கு உங்களுக்கு அனுப்ப வேண்டிய பூங்கொத்தை ஒரு சவ ஊர்வலத்துக்கு அனுப்பி வச்சிட்டான் எங்க கடைப் பையன். அதுல 'உங்களின் இந்தப் புதிய துவக்கம் வெற்றிபெற வாழ்த்துகிறேன்'ன்னு எழுதியிருந்துச்சி. அங்க இருந்து எப்ப திட்டுவரும்னு பயமாயிருக்கு" அப்படின்னார்

வழுக்கையிலிருந்து ......
Google Buzz Logo

வழுக்கைப் பிரச்சனையிலிருந்து விடுபட ஒரு அருமையான யோசனை! உடனடி பலன்! உடனே செயல்படுத்துங்கள்! என்று ஒரு மின்னஞ்சல் வந்தது.

ஆஹா! நம்ம தலைக்கும் ஒரு விமோசனம் என்று திறந்து பார்த்தால்......





அடிக்காதீங்க... அடிக்காதீங்க... இதுக்கு நான் பொறுப்பல்ல

உலகத்துல இதெல்லாம் சகஜமப்பா
Google Buzz Logo

ஒருமுறை ஐக்கிய நாடுகள் சபை ஒரு கருத்துக்கணிப்பு நடத்துச்சி

"மற்ற உலக நாடுகளில் ஏற்படுள்ள உணவுப் பற்றாகுறையை சமாளிக்க தேவையான தீர்வுகளைப்பற்றி உங்கள் நேர்மையான கருத்துக்களை தயவுசெய்து தெரிவிக்கவும்" ன்னு ஒரு சுற்றறிக்கையை எல்லா நாட்டு மக்களுக்கும் அனுப்புனாங்க

யார்கிட்டயிருந்தும் பதில் வரலை. என்னடா விஷயம்னு விசாரிச்சி பாத்தா

ஆப்ரிக்கால ஜனங்களுக்கு உணவுன்னா என்னனு தெரியல.

மேற்கு ஐரோப்பால ஜனங்களுக்கு பற்றாகுறைன்னா என்னனு தெரியல.

கிழக்கு ஐரோப்பால ஜனங்களுக்கு கருத்துன்னா என்னனு தெரியல.

மத்திய கிழக்கு நாடுகள்ல ஜனங்களுக்கு தீர்வுன்னா என்னனு தெரியல.

ஆசியால ஜனங்களுக்கு நேர்மைன்னா என்னனு தெரியல.

தென் அமெரிக்கால ஜனங்களுக்கு தயவுசெய்துன்னா என்னனு தெரியல.

அமெரிக்கால ஜனங்களுக்கு மற்ற உலக நாடுகள்னா என்னனு தெரியல.

(அதெப்படி பொத்தாம் பொதுவா ஒரு கண்டத்தை சேர்ந்த ஜனங்களை குறை சொல்லலாம்னு சண்டைக்கு யாரும் வராதீங்கப்பா)

எப்படியாச்சி - 2
Google Buzz Logo

ஒருமுறை ஒரு பயங்கரமான விமான விபத்து. புலனாய்வு அதிகாரிகள் வந்து பார்க்கும்போது ஒரே ஒரு சிம்பன்சி குரங்கு மட்டும் உயிரோட இருந்துச்சி. அதை காப்பாத்தி கூட்டிப் போகும்போது அந்த குரங்கு பேச ஆரம்பிச்சது. புலனாய்வு அதிகாரிகள் ஆச்சர்யமாகி அது கிட்ட நடந்ததப் பத்தி விசாரிக்க ஆரம்பிச்சாங்க

அ: விமானத்துல ஏறினதும் பயனிகள் என்ன பண்ணாங்க
கு: எல்லாரும் சீட் பெல்ட் போட்டாங்க
அ: பணிப்பெண்கள் ?
கு: எல்லாருக்கும் வணக்கம் சொல்லிகிட்டிருந்தாங்க
அ: விமானிகள் ?
கு: முன்னாடி உக்காந்து எல்லாம் சரியா வேல செய்யுதான்னு பாத்துகிட்டிருந்தாங்க
அ: நீ ?
கு: ஜனங்களையெல்லாம் வேடிக்கை பாத்துகிட்டிருந்தேன்
அ: அப்றம் என்ன நடந்தது
கு: பயனிகள் எல்லாம் சாப்ட்டுகிட்டிருந்தாங்க
அ: பணிப்பெண்கள் ?
கு: சாப்பாடு பரிமாறிகிட்டிருந்தாங்க
அ: விமானிகள் ?
கு: அறிவிப்பெல்லாம் முடிஞ்சி விமானத்தை ஓட்ட ஆரம்பிச்சாங்க
அ: நீ ?
கு: வாழைப்பழம் சாப்பிட்டுட்டு தோலையெல்லாம் தூக்கி வீசிக்கிட்டிருந்தேன்
அ: அப்றம் என்ன நடந்தது
கு: பயனிகள் எல்லாம் தூங்க ஆரம்பிச்சாங்க
அ: பணிப்பெண்கள் ?
கு: மேக்கப் போட்டுக்கிட்டிருந்தாங்க
அ: விமானிகள் ?
கு: விமானத்தை ஓட்டிக்கிட்டு இருந்தாங்க
அ: நீ ?
கு: சும்மாதான் இருந்தேன். ரொம்ப போர் அடிச்சது
அ: விபத்து நடக்கறத்துக்கு முன்னால என்ன நடந்தது
கு: ஜனங்கள்ளாம் தூங்கினு இருந்தாங்க
அ: பணிப்பெண்கள் ?
கு: எல்லாரும் பயனிகளுக்கு தேவையான தலையனை போர்வையை கொடுத்துகிட்டிருந்தாங்க. ரெண்டு பேரு மட்டும் காணோம். காக்பிட்ல போயி பாத்தா விமானிகள் அறையில அவங்களுக்கு முத்தம் குடுத்துகினு இருந்தாங்க
அ: விமானிகள் ?
கு: அவங்க ரெண்டு பேருக்கும் முத்தம் குடுத்துகினு இருந்தாங்க
( sheakuக்கு வருத்தமளிப்பதாக கூறியதால் மாற்றப்பட்டது)
அ: நீ ?
கு: விமானத்தை ஓட்டிக்குனு இருந்தேன்

எப்படியாச்சி - 1
Google Buzz Logo

ரெண்டு சின்னப்பசங்க பேசிக்கிட்டாங்க. வயசானப்புறம் எப்படி செத்தா நல்லதுன்றது பத்தி பேச்சு திரும்புச்சி

சி1: நான் வயசனாக்க எங்க தாத்தாவோட நண்பர்கள் மாதிரி ஆ! ஊ! ன்னு கத்திகிட்டு மத்தவங்கள கஷ்டப்படுத்திட்டு வேதனையோட சாக விரும்பல, எங்க தாத்தா மாதிரி நிம்மதியா தூங்கும்போது அமைதியா சாகனும்னு விரும்பறேன்.
சி2: உங்க தாத்தாவோட நண்பர்கள்லாம் எப்ப எப்படி செத்தாங்க
சி1: ஒரு ராத்திரி வண்டியில எல்லாம் ஊருக்கு போயிட்டு திரும்பிக்கினு இருக்குறப்போ வண்டி வேகமா மரத்துல மோதி எல்லாரும் செத்து போயிட்டாங்க
சி2: சரி, உங்க தாத்தா எப்ப எப்படி செத்தாரு
சி1: அவரும் அப்பவேதான். அந்த வண்டிய ஓட்டிகிட்டு வந்தவரே அவர்தான்

பிள்ளையார் டான்ஸ் ஆடிய கதை
Google Buzz Logo

முன்னொரு காலத்துல மூனு மீனவ நண்பர்களிருந்தாங்க. எல்லாரும் சேர்ந்து ஒரு நாள் கடல்ல மீன் பிடிக்கலாம்னு போனங்க. இதுல பாத்தீங்கன்னா ஒருத்தர் இந்து ஒருத்தர் முஸ்லீம் ஒருத்தர் கிருஸ்தவர். தூரமா போய் மீன் புடிக்கும்போது கடல்ல திடீர்னு புயல் வந்துருச்சி. கிறிஸ்தவர் "கர்த்தரே காப்பீர்"னு சொன்ன உடனே ஏசு வந்து அவரை காப்பாத்திட்டாரு. முஸ்லீம் "அல்லாவே அருள்"னு சொன்ன உடனே அல்லா வந்து அவரை காப்பாத்திட்டாரு. இந்துக்கு யாரைக்கூப்பிடனும்னு கொழப்பம் வந்துடுச்சி. கடைசியா முடிவு பண்ணி. "புள்ளையாரப்பா! நான் புள்ளகுட்டிக்காரன் என்னிய காப்பாத்து உனுக்கு 108 தேங்கா ஒடைக்றேன்"ன்னான். புள்ளையாரு வந்தாரு. ஆனா அவனை காப்பாத்த்றதுக்கு பதிலா, கடற்கரைல நின்னுகிட்டு "எத்தினி தபா என்னிய முழுகவுட்டு நீ டான்ஸ் ஆடியிருப்ப! இப்ப நீ முழுகு. நான் டான்ஸ் ஆடுறேன்"னு சொல்லி டான்ஸ் ஆடிட்டு போய்ட்டாரு

இந்த கதைய நம்ம முக்கிய பிரமுகருங்க(அவங்கல்ல பலபேர் அரசு சொத்தை அமுக்கியதால "அமுக்கிய பிரமுகர்"னு இல்ல கூப்பிடனும்) சில பேர் கிட்ட சொன்னா அவங்க எப்படி ரியாக்ட் பண்ணறாங்கன்னு பாக்கலாம்

சுப்ரமண்யசாமி: இது திட்டமிட்ட சதி. கோபிங்கற பேர்ல இந்தக் கதைய சொன்னது ஒரு இந்துவே இல்லை. போன வாரம் ஏசுவ நான் டீ பார்டிக்கு கூப்பிட போனப்ப அவர் கூட இதைத்தான் சொன்னாரு. வர்ற பிப்ரவரி 31 அன்னிக்கி இத நான் ப்ரூவ் பண்ணுவன்

தொல்.திருமாவளவன்: மீனவர் என்றாலே தலித். ஒரு கதையில் கூட தலித் நண்பன் மூழ்குவதை எங்களால் ஏற்றுகொள்ள முடியாது. இதை எதிர்த்து போராட மரவெட்டி ஐயா மற்றும் சிலருடன் விவாதித்து முடிவு செய்வோம்

மரவெட்டி ஐயா: இந்தக் கதை சொல்வதற்கு முன் எங்களிடம் கோபி முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும். எங்கள் தொண்டர்கள் இந்த கதை எழுதப்பட்ட வெப்சைட்டை அழிப்பார்கள். இதை செயல்படுத்த ஒரு கமிட்டி அமைக்கப்படும் அதற்கு அன்புமணி தலைமை தாங்க வேண்டும் இதெல்லாம் கட்சி பொதுக்குழு செயற்குழு கூடி எடுத்த முடிவு

இ.மு இராமகோபாலன்: இதை எழுதியவரின் பெயரில் என் பெயரிலுள்ள "கோ" இருப்பதற்காக வெக்கப்படுறேன். இந்துக்களை காக்க வேணாம். இது போன்ற கதை எழுதுற ஆளுங்களை முஸ்லீம்களோட நாட்டுல இருந்தா நாடு கடத்தி இருப்பாங்க. இது குறித்து அன்பு சகோதரி ஜெயாவுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கேன்.

கழகத்தின் காவல்தெய்வம்: உங்கள் சகோதரியின் பொன்னாட்சியிலே இது நடந்தது மிக வருந்தத்தக்கது. அந்த இந்து மீனவ குடும்பத்துக்கு என் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன். ரு. 1 லட்சம் நிவாரண நிதி வழங்குவதற்கு உத்தரவிட்டுள்ளேன். இதுபோல எழுதுபவர்களை தடுக்க "கட்டாய எழுத்து தடுப்பு சட்டம்" கொண்டு வரப்படும்.

முத்தமிழ் காவலர்: உடன்பிறப்பே, நமது மீனவ நண்பன் மூழ்கியது வருந்தத்தக்கது. ஆனால் அவனை தேடி கண்டுபிடிக்காமல் அவன் இறந்துவிட்டதாக கூறி நிதியுதவி அளிப்பதாக நாடகமாடியிருக்கிறார் இந்த அம்மையார். மதச்சார்பற்ற நமது கழக ஆட்சி நடந்த போது இப்படியெல்லாம் நடந்ததா? இந்தக் கூத்தையெல்லாம் பார்த்துக்கொண்டு சும்மாயிருக்க தமிழக மக்களொன்றும் சொற்றாலடித்த் பிண்டங்களல்ல.சிறுபான்மை முஸ்லீம்களுக்கு எதிரான இந்த ஆட்சியை அகற்றும் மக்களின் முயற்சிக்கு தோள் கொடுக்க வெகுன்டெழுந்து வாராய்.

சொர்க்கத்துல கிரிக்கெட் உண்டா?
Google Buzz Logo

பிரபல கிரிக்கெட் வீரர்கள் ரெண்டு பேர் இருந்தாங்க (டெண்டுல்கர், கங்குலின்னு வச்சுக்குவமே அவங்களுக்கு ஆட்சேபனையில்லைன்னா). அவங்களுக்கு சொர்க்கத்துல கிரிக்கெட் மேட்ச் உண்டா இல்லையாங்கிற தீராத சந்தேகம் ஒன்னு இருந்தது. சரின்னு ரெண்டு பேர்ல யாரு மொதல்ல செத்தாலும் சொர்க்கத்துக்கு போய் அங்க கிரிக்கெட் உண்டான்னு பர்த்துட்டு ஆவியா வந்து மத்தவர் கிட்ட சொல்லனும்னு ஒரு ஒப்பந்தம் பண்ணாங்க.

வயசானப்புறம் டெண்டுல்கர் மொதல்ல செத்துப்போய் சொர்க்கத்துக்கு போனார்.

கொஞ்சநாள் கழிச்சி ஒரு நாள் கங்குலி பார்க்ல ஒக்கந்துகிட்டு இருந்தப்ப "சௌரவ்! சௌரவ்!" அப்பிடின்னு கொரல் கேட்டுச்சி திரும்பிப் பாத்தா திடீர்னு டெண்டுல்கர் ஆவியா அங்க நின்னுக்கிட்டிருந்தார்.

சந்தோஷத்துல கங்குலி அவரைப் பாத்து "சொர்க்கத்துல கிரிக்கெட் உண்டா?"ன்னு கேட்டார்.

டெண்டுல்கர் அதுக்கு அமைதியா அவரைப்பாத்து "உனக்கு ஒரு நல்ல சேதி, ஒரு கெட்ட சேதி"ன்னு சொன்னார்.

கங்குலி "சரி மொதல்ல நல்ல விஷயத்தச் சொல்லு"ன்னாரு

"சொர்கத்துல கிரிக்கெட் இருக்கு" அப்பிடின்னாரு டெண்டுல்கர்.

"சூப்பர். இந்த சந்தோஷத்த எந்த கெட்ட சேதியும் கெடுக்க முடியாது. அது என்ன கெட்ட சேதி"ன்னாரு கங்குலி

"வர்ற வெள்ளிக்கெழமை சொர்க்கத்துக்கு நரகத்துக்கும் நடக்ற ஒன்டேல நீதான் சொர்க்கத்து சார்புல ஓபனிங்கு பேட்ஸ்மேன்"ன்னாரு டெண்டுல்கர்.

மாட்டிக்கிட்டியேடா மாதவா - 2
Google Buzz Logo

(கம்பெனியில நம்ப ஹீரோ மாதவன் வேலை நேரத்துல ஒரு பொண்ணு கூட யாஹூல அரட்டையடிச்சிகிட்டிருந்தார்)

மாதவன்: ஹலோ உங்க பேர்/வயசு/ஊர் என்ன ?
அகிலா: அகிலா/21/இந்தியா, நீங்க
மா: மாதவன்/24/நியூயார்க்,தொழில் மென்பொருள் - நீங்க?
அ: நானும். சேம் ஸ்வீட்

(இதற்குள் மாதவனின் மேனேஜர் அவன் மேஜையருகில் வருகிறார்)

மா: கொஞ்சம் பொறு. என் மேனேஜர் வர்றான். அப்றம் பேசுவம்
மேனேஜர்: ஹாய் மாதவன், எனக்கு ஒரு சந்தேகம். இந்த புள்ளிவிவரத்துல வர்ற எல்லாத்தையும் வரிசைப்படுத்த்றதுக்கு ஒரு கோட் எழுதித்தர முடியுமா?
மா: சாரிங்க. இப்ப கொஞ்சம் வேலையா இருக்கேன் உங்களுக்கு நாளைக்கு காலைல தர்றனே

(மேனேஜர் யோசித்தபடி தனது அறைக்கு திரும்புகிறார்)

மா: ஆங். சொல்லு கண்ணு. மேனேஜர் நாய் பொயிடிச்சி.
அ: இந்த மேனேஜருங்கனாலே கடியனுங்கதான் இல்ல
மா: ஆமா. அவனுங்களுக்கெல்லாம் புத்தியே கெடையாது
அ: அப்புறம், எனக்கு ஒரு சின்ன சந்தேகம்
மா: என்ன சொல்லு. தீத்து வச்சிடுவோம்
அ: எண்களை வரிசைப்படுத்த ஒரு ப்ரோக்ராம் வேனும், தரமுடியுமா? எவ்வளவு நேரமாகும்
மா: ஒரே நிமிஷம். இப்பொ தந்துர்றேன்
அ: தம்பி இதத்தானப்பா கொஞ்சநேரம் முன்னாடி நேர்ல கேட்டேன்
மா: !!!!????